by Fazlullah Mubarak 13-05-2019 | 8:11 AM
இன்றைய தினம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என முப்படைத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளின் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளிலும் பாதுகாப்பு நிலைமைகள் உரிய முறையில் பேணப்படுவதாகவும் முப்படையின் தளபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.