by Staff Writer 13-05-2019 | 5:40 PM
Colombo (News 1st) மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணத்தில் உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வட மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாகாணத்தின் சில பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல்களின்போது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.