மக்களின் பாதுகாப்பிற்காக புதிய முகாம்கள் அமைப்பு

மக்களின் பாதுகாப்பிற்காக புதிய முகாம்கள் அமைப்பு - இராணுவத் தளபதி

by Staff Writer 12-05-2019 | 8:43 AM
Colombo (News 1st) மக்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு மாகாணத்தில் புதிய முகாம்களை அமைக்கவுள்ளதாக, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். நியூஸ்பெஸ்ட்டுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே இராணுவத்தளபதி இதனைக் கூறியுள்ளார். இதேவேளை, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இராணுவத்தில் தடுத்துவைத்திருக்கும் காலத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.