அமெரிக்க அழுத்தங்களிலிருந்து மீள்வதுகுறித்து ஈரான்

அமெரிக்க அழுத்தங்களிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஈரானிய ஜனாதிபதி

by Staff Writer 12-05-2019 | 11:56 AM
Colombo (News 1st) அமெரிக்காவின் அழுத்தங்களிலிருந்து மீண்டு வருவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என, ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி (Hassan Rouhani) வலியுறுத்தியுள்ளார். 1980ஆம் ஆண்டுகளில் ஈராக்குடனான போருக்குப் பின்னர் நாடு மீண்டெழுந்ததைக் காட்டிலும், தற்போதைய அமெரிக்க தடைகளிலிருந்து ஈரான் மீண்டெழுவது கடினமானதாக இருக்கலாம் என ஹசன் ரௌஹானி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அமெரிக்கத் தடைகளால் ஈரான் மிகவும் நெருக்கப்படுவதாக அந்நாட்டின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இதனிடையே அணுத்திட்டங்களைக் கைவிடுவது தொடர்பில் தம்முடன் பேச்சுவார்த்தை நடாத்த வருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானிய ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.