தேவாலயங்களில் ​திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்

கொழும்பு உயர்மறைமாவட்டத்திற்கு உட்பட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் ​இன்று முதல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்

by Staff Writer 12-05-2019 | 7:02 AM
Colombo (News 1st) கொழும்பு உயர்மறைமாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ​இன்று (12ஆம் திகதி) ஞாயிறு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் என, கொழும்பு பேராயர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் பிரிவினரால் அனைத்து தேவாலயங்களுக்கு அருகிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இன்று திருப்பலிகளில் கலந்துகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பின் நிமித்தம் கடந்த 2 வாரங்கள் தேவாலயங்களில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்