ஹொரம்பாவ பள்ளிவாசல் மீது தாக்குதல்: பொலிஸ் விசாரணை ஆரம்பம்

by Staff Writer 11-05-2019 | 3:23 PM
Colombo (News 1st) குருநாகல் - நாரம்மலை, ஹொரம்பாவ ஜாமிய ஜூம்மா பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். ஹொரம்பாவ பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சிலராலேயே பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிவாசலின் முன் பக்கம் உள்ள கண்ணாடியை உடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராக்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.