போஷாக்கு மட்டத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்

மாணவர்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்

by Staff Writer 11-05-2019 | 5:17 PM
Colombo (News 1st) குறைந்த போஷாக்குடைய மாணவர்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பாடசாலை மாணவர்களின் போஷாக்கு மட்டத்தை மேம்படுத்துவதற்காக பாடசாலையில் விசேட உணவுத் திட்டம், பால் வழங்கல், திரிபோஷா வேலைத்திட்டம், ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டம் ஆகியன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சி, முல்லைதீவு, திருகோணமலை, நுவரெலியா, பதுளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.