மறு தேர்தலுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார் சிறிதரன்: செல்வராசா கஜேந்திரன்

by Staff Writer 11-05-2019 | 8:02 PM
Colombo (News 1st) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று (11) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போது, கோட்டாபய ராஜபக்ஸ சுதந்திரமாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு, போர்க்குற்ற விசாரணையிலிருந்து அவர் பாதுகாக்கப்பட்டமையே காரணம் என செல்வராசா கஜேந்திரன் சுட்டிக்காட்டினார். கோட்டாபய ராஜபக்ஸவை போர்க்குற்றத்தில் இருந்து பாதுகாத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் எனவும் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டினார். மேலும், எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டு மறு தேர்தலுக்காக சிறிதரன் முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.