பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: ஜனாதிபதி

by Staff Writer 11-05-2019 | 9:00 PM
Colombo (News 1st) நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் அம்பாறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்தார்.
இந்த பயங்கரவாத தாக்குதல்களினால் நான் பின்வாங்கப்போவதில்லை, அச்சமடையப் போவதில்லை. நான் வீட்டுக்குச் செல்லப்போவதில்லை. நான் பயங்கரவாதிகளை இல்லாதொழிப்பேன். 21 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன். இந்த பொறுப்பை மீறியவர்கள் யார் என்பதை ஆராய்வதற்கு உயர் நீதிமன்ற நீதியரசர் அடங்கிய விசாரணைக்குழு ஒன்றையும் நியமித்துள்ளேன். இரண்டு இடைக்கால அறிக்கைகளை அவர்கள் சமர்ப்பித்துள்ளார்கள். இறுதி அறிக்கையை அவர்கள் சமர்ப்பிப்பார்கள். பொறுப்புக்கூற வேண்டிய எந்தவொரு நபருக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்நாட்டின் குண்டுகள் வெடிப்பதை விரும்புபவர்களும் இருக்கின்றனர். அவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதிகள். அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சேவையாற்ற வேண்டும்.
என ஜனாதிபதி கூறினார். ''நாட்டிற்காக ஒன்றிணைவோம்'' அபிவிருத்தித் திட்டத்தின் அம்பாறை மாவட்ட மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.