by Staff Writer 11-05-2019 | 8:28 PM
Colombo (News 1st) நாட்டை வந்தடைந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மௌலவி, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மதங்களிடையே பேதங்களை தோற்றுவிக்கும் வகையில் காணொளியொன்றை வௌியிட்டமை தொடர்பில் குறித்த மௌலவி
பாதுகாப்பு பிரிவினரால் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொஹைதீன் கனி சேகு முனாஜித் எனும் இந்நபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.