பயங்கரவாதத்தை அழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

பயங்கரவாதத்தை அழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜனாதிபதி

by Staff Writer 11-05-2019 | 3:31 PM
Colombo (News 1st) இன, மத, அரசியல் என பல பிரிவுகளால் பேதம் கண்டுகொள்ளாமல், பயங்கரவாதத்தை அழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (10) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய மாகாணத்தின் அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரதானிகள் ஆகியோரை சந்தித்து பிரதேச பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாதுகாப்புத்துறை மிகவும் திட்டமிட்டு செயற்பட்டுள்ளதாக இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.