அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்போர் பொலிஸ் நிலையங்களில் அறிவிக்க சந்தர்ப்பம்

by Staff Writer 11-05-2019 | 4:44 PM
Colombo (News 1st) அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை தம்வசம் வைத்திருப்போர், அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அறிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இன்று காலை 6 மணி முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கிடைக்கும் தகவல்களுக்கு அமைய, பொலிஸாரால் குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்படும் எனவும் அவர் கூறினார். இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.