ஏப்ரல் மாதத்தில் தேயிலை விற்பனையில் வீழ்ச்சி

ஏப்ரல் மாதத்தில் தேயிலை விற்பனையில் வீழ்ச்சி

by Staff Writer 10-05-2019 | 5:01 PM
Colombo (News 1st) கடந்த ஏப்ரல் மாதத்தில் தேயிலை விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தேயிலை விற்பனைக்கான சராசரி 585 ரூபாவை எட்டியிருந்தது. எனினும், ஏப்ரல் மாதத்தில் தேயிலை விற்பனை சராசரி 578 ரூபாவாகக் காணப்பட்டதாக Forbes and Walker Tea Brokers தரகு நிறுவனம் அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 28 ரூபா வரையிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.