விமான நிலைய கட்டுப்பாடுகள் தளர்த்தம்

விமான நிலையத்தினுள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தம்

by Staff Writer 09-05-2019 | 7:10 PM
Colombo (News 1st) விமான நிலையத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வௌியேறுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பயணிகள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் கிஹான் செனவிரத்ன குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். விமான நிலையத்திற்குள் செல்லும் போதும் அங்கிருத்து வௌியேறும் போதும் பொதிகளுடன் நீண்ட தூரம் நடந்து செல்ல நேர்வதால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய, நேற்றிரவு முதல் அமுலாகும் வகையில் வரையறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இனி வழமை போல், பயணிகளின் வாகனங்கள் விமான நிலைய நுழைவாயில் வரை செல்ல முடியும் என அவர் தெரிவித்தார்.