மின்சாரத்தை தொடர்ச்சியாக விநியோகிப்பதில் சவால்

மின்சாரத்தை தொடர்ச்சியாக விநியோகிப்பதில் சவாலை எதிர்கொள்வதாக அமைச்சு தெரிவிப்பு

by Staff Writer 09-05-2019 | 7:44 AM
Colombo (News 1st) மின்சார விநியோகத்தைத் தொடர்ச்சியாக வழங்குவதில் சவாலை எதிர்நோக்கியுள்ளதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையத்தினூடான மின் உற்பத்தி வீழ்ச்சி மற்றும் மின்சாரத்திற்கான நாளாந்த கேள்வி அதிகரித்தல் ஆகிய காரணிகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மின்சக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகிய போதிலும் நீர்மின் உற்பத்தி செய்யப்படும் நீர்நிலைகளில் 32 வீத நீர்மட்டமே காணப்படுவதாகவும் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்தக சக்தி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.