பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க வர்த்தகத் திணைக்கள அதிகாரி உயிரிழப்பு

by Staff Writer 09-05-2019 | 1:21 PM
Colombo (News 1st) கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத்தாக்குல்களில் காயமடைந்த அமெரிக்க வர்த்தக திணைக்களத்தின் அதிகாரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலெனா டெப்லிட்ஸ் (Alaina Teplitz ) தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறன்று ஷங்கிரிலா ​ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில், செல்சா டெக்காமினாடா ( Chelsea Decaminada,) பலத்த காயங்களுக்குள்ளானதாக அவர் கூறியுள்ளார். டியுக் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அவர், அமெரிக்க வர்த்தக திணைக்களத்தின் சர்வதேச வியாபார நிபுணராக கடமையாற்றியுள்ளார். செல்சா டெக்காமினாடாவின் மறைவு தொடர்பில் இரங்கலை தெரிவித்துள்ள அமெரிக்க வர்த்தக திணைக்களத்தின் செயலாளர் வில்பர் ரோஸ், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.