நடிகர் ரயன் வேன்க் ரோயனை அபராதத்துடன் விடுதலை செய்ய உத்தரவு

by Staff Writer 09-05-2019 | 1:12 PM
Colombo (News 1st) நடிகர் ரயன் வேன்க் ரோயனை 4,000 ரூபா அபராதம் விதித்து விடுதலை செய்வதற்கு, நீதிமன்றம் இன்று (9ஆம் திகதி) உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர், மாத்தறை பிரதம நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். துபாயில் மாகந்துரே மதுஷுடன் கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வேன்க் ரோயன் அண்மையில் நாடு கடத்தப்பட்டிருந்தார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் வெலிகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். நடிகர் ரயன் வேன்க் ரோயனின் காரிலிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.