சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணியவர் கைது

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படுபவர் கைது

by Staff Writer 09-05-2019 | 9:07 PM
Colombo (News 1st) தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய மொஹமட் அலியார் என்ற சந்தேகநபர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி, மெத்தாபள்ளி பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். பயங்கரவாதி மொஹமட் சஹ்ரானுடன் குறித்த சந்தேகநபர் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுத்துள்ளதாக சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.