English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
09 May, 2019 | 8:25 pm
Colombo (News 1st) அவிசாவளை – புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தின் 12 ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலைக்கு முன்பாக அமைதியான முறையில் பெற்றோர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் 806 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 57 ஆசிரியர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில், 40 ஆசிரியர்களுடனேயே பாடசாலை இயங்கி வந்தது.
இந்நிலையில், 12 ஆசிரியர்களின் இடமாற்றம் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை பாதிப்பதாக பெற்றோர் கவலை வௌியிட்டனர்.
புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர், நேற்று முன்தினம் தன்னார்வமாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த 12 ஆசியர்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.
இதனையடுத்து, ஆசிரியர்கள் மேல் மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடியதை அடுத்து 12 ஆசிரியர்களுக்கும் கொழும்பிலுள்ள வேறு பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
21 Apr, 2022 | 05:40 PM
18 Dec, 2021 | 06:05 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS