by Staff Writer 08-05-2019 | 7:49 PM
Colombo (News 1st) ஹொரணை - மொரகஹஹேன, தலகல பிரதேசத்திலுள்ள காணியொன்றில் இருந்து 174 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காணியின் உரிமையாளரினால் நேற்று (07) மாலை காணி துப்புரவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை டெட்டனேட்டர்களை அவதானித்துள்ளார்.
அதன் பின்னர் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
எவரேனும் ஒருவரினால் இந்த டெட்டனேட்டர்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.