மட்டக்களப்பில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் எரியூட்டி புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

by Staff Writer 08-05-2019 | 3:32 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வாகனேரி பகுதியில், பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று எரியூட்டப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சிசுவின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி, சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இன்று விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் 30 வயதான சிசுவின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக வாகனேரி பொலிஸார் தெரிவித்தனர். சிசுவின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாகனேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.