கல்வியமைச்சின் உதவிப் பணிப்பாளர் கைது

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணியதான சந்தேகத்தில் கல்வியமைச்சின் உதவிப் பணிப்பாளர் கைது

by Staff Writer 08-05-2019 | 7:52 AM
Colombo (News 1st) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணியதாக, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள கல்வியமைச்சின் உதவிப் பணிப்பாளரிடம் ​மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நுரைச்சோலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் கொழும்பிலுள்ள அலுவலகத்தில் இருந்து அவருக்கு சொந்தமான கடிதங்கள் மற்றும் கணினியை விசாரணைகளுக்காக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதனிடையே, குறித்த அதிகாரி தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அவருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். தவ்ஹித் ஜமாத் அமைப்பின் ஆரம்ப உறுப்பினர் என தெரிவிக்கப்படும் கோடீஸ்வரரான இரத்தினக்கல் வர்த்தகர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சொந்தமான பாணந்துறையில் அமைந்துள்ள இரண்டு மாடி சொகுசு வீடொன்றில் இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபரின் வீட்டில் இருந்து 591 ரைபில் ரவைகள், சொகுசு ஜீப் வண்டி, இரண்டு வௌிநாட்டு கடவுச்சீட்டுக்கள், வௌிநாட்டு நாணயத்தாள்கள், தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு வழங்கிய பணம் தொடர்பான பற்றுச்சீட்டுக்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்