சரத் என் சில்வா மீதான வழக்கு: நீதியரசர் விலகல்

சரத் என் சில்வாவுக்கு எதிரான வழக்கிலிருந்து நீதியரசர் ஜயவர்தன விலகல்

by Staff Writer 08-05-2019 | 2:05 PM
Colombo (News 1st) நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்கும் மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்திலிருந்து பிரசன்ன ஜயவர்தன இன்று (8ஆம் திகதி) விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களின் நிமிர்த்தம் அவர் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், பிரியந்த ஜயவர்தன நீதியரசர் குழாத்திலிருந்து விலகினார். 2018 டிசம்பர் மாதம் 3ஆம் திகதி மருதானையில் இடம்பெற்ற மக்கள் பேரணியொன்றில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்த கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்து பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர உள்ளிட்ட மூவரினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.