குவாத்தமாலா துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழப்பு

குவாத்தமாலா துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 08-05-2019 | 11:37 AM
Colombo (News 1st) குவாத்தமாலாவில் (Guatemala) சிறைச்சாலையை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இதில் 20 பேர் வரை காயமடைந்துள்ளதுடன், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து, சுமார் 1,500 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமானது பின்னர் மோதலாக மாறியுள்ளதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர். 1970 ஆம் ஆண்டு சுமார் 1,000 பேரை உள்வாங்கக்கூடிய வகையில் கட்டப்பட்ட குறித்த பாவோன் (Pavon) சிறைச்சாலையில், தற்போது குறைந்தது 4,000 கைதிகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.