நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர்

பாதுகாப்பு இல்லையெனும் வாய் வார்த்தைகளை வதந்திகளாக பரப்ப வேண்டாம் - பாதுகாப்புச் செயலாளர்

by Staff Writer 07-05-2019 | 6:59 AM
Colombo (News 1st) வதந்திகளை நம்ப வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலை தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் நாயகம் சாந்த கோட்டேகொட நேற்று (6ஆம் திகதி) தௌிவுபடுத்தியுள்ளார். இதன்போது முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். வதந்திகளை நம்பாதீர்கள், நாம் மிகுந்த நம்பிக்கையுடன் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் பாதுகாப்பு இல்லையெனும் வாய் வார்த்தைகளை வதந்திகளாக பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். பாடசாலைகள் மீள திறக்கப்பட்டுள்ள, ஆறாம் ஆண்டிலிருந்து உயர்தரம் வரையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. பெற்றோர் மனங்களில் உள்ள அச்சம் காரணமாக மாணவர்களின் வருகையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது. எனினும் முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரை அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக, பாதுகாப்புச் செயலாளர் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.