நைகரில் எரிபொருள் கொள்கலன் வெடித்ததில் 58 பேர் பலி

நைகரில் எரிபொருள் கொள்கலன் வெடித்ததில் 58 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 07-05-2019 | 10:04 AM
Colombo (News 1st) நைகர் தலைநகர் நியாமியில் (Niamey) விமான நிலையத்தினருகே எரிபொருள் கொள்கலனொன்று வெடித்து சிதறியதில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்திற்கு அருகே கவிழ்ந்த குறித்த கொள்கலனிலிருந்து எரிபொருளை சேகரிப்பதற்காக சென்றவர்களே இதன்போது அதிகளவில் உயிரிழந்துள்ளனர். நேற்று (6ஆம் திகதி) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களை அந்நாட்டு ஜனாதிபதி மஹமூத் இசோபௌ (Mahamadou Issoufou) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதற்கு முன்னர், 2010ஆம் ஆண்டு நைஜீரியாவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.