2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

by Staff Writer 07-05-2019 | 9:25 AM
Colombo (News 1st) ஐஸ் ​போதைப்பொருளுடன் நாட்டுக்கு வருகை தந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சந்தேகநபரின் பயணப்பொதியினுள் சூட்சுமமான முறையில் மறைத்துக்கொண்டுவரப்பட்ட 2 கிலோ 901 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மாபோல பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, 7 நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.