'Batticaloa Campus' தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை

by Staff Writer 06-05-2019 | 6:57 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாணத்தின் புனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 'பெட்டிக்கலோ கெம்பஸ்' (Batticaloa Campus) எனும் பெயரிலான ஷரியா பல்கலைக்கழகத்தில் எந்தவொரு பட்டப் படிப்பையும் முன்னெடுப்பதற்கு அனுமதி கோரப்படவில்லை என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், அதற்கான எந்தவொரு அதிகாரமும் வழங்கப்படவில்லை எனவும் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் 15 பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முன்னெடுக்க முடியும் எனவும் குறித்த அறிக்கையின் ஊடாக ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.