ரஷ்ய விமானம் தீ பிடித்ததில் 41 பேர் உயிரிழப்பு

ரஷ்ய விமானம் தீ பிடித்ததில் 41 பேர் உயிரிழப்பு

by Staff Writer 06-05-2019 | 3:11 PM
Colombo (News 1st) ரஷ்ய தலைநகர் மொஸ்கோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் ஒன்று தீப்பற்றியதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தரையிறங்கும்போதே, விமானம் தீப்பற்றியதுடன், அவசர நுழைவாயில் ஊடாக பயணிகள் வௌியேறும் காட்சிகள், இணையத்தளத்தில் வௌியாகியுள்ளன. குறித்த ஜெட் விமானத்தில் 78 பயணிகளும் 5 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர். விமான விபத்தில் காயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையத்துக்கு திரும்ப வேண்டிய சூழல் காணப்பட்டதாக ரஷ்ய அரசின் ஏரோஃபிளாட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியதும், ஓடுபாதையில் அதன் எஞ்சின் தீப்பிடித்துவிட்டதாக ஏரோஃபிளாட் (Aeroflot) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.