யாழ்.மாணவர்களை விடுதலை செய்ய பொலிஸார் ஆட்சேபனை

யாழ்.பல்கலை மாணவர்களை விடுதலை செய்ய பொலிஸார் ஆட்சேபனை

by Staff Writer 06-05-2019 | 7:55 PM
Colombo (News 1st) விசேட ​சோதனை நடவடிக்கையின்போது அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் உணவக உரிமையாளர் ஆகியோரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி இன்று (6ஆம் திகதி) மனு தாக்கல் செய்யப்பட்டது. யாழ். நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மாணவர்களையும் உணவக நடத்துநரையும் பிணையில் விடுதலை செய்வதற்கு பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.