நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் விவாதிக்க தீர்மானம்

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் விவாதிப்பதற்குத் தீர்மானம்

by Staff Writer 06-05-2019 | 4:29 PM
Colombo (News 1st) நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதிக்க பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான செயற்குழு தீர்மானித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினங்களில் (7 மற்றும் 8ஆம் திகதி) விவாதத்தை நடத்திவதற்குக் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு இன்று (6ஆம் திகதி) பிற்பகல் 2 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கூடியது. இதனிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த பாராளுமன்ற பொதுமக்கள் கெலரியை நாளை முதல் மீண்டும் திறப்பதற்கும் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.