தொழில்முயற்சியாளர்களை பயிற்றுவிப்பதற்கு விண்ணப்பம்

தொழில் முயற்சியாளர்களை பயிற்றுவிப்பதற்கான விண்ணப்பம் கோரல்

by Staff Writer 06-05-2019 | 3:42 PM
Colombo (News 1st) தென் மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விவசாய வர்த்தகம், பெறுமதி சேர்க்கப்பட்ட உணவு உற்பத்தி, உணவை நீண்டகாலம் களஞ்சியப்படுத்தல், காளான் உற்பத்தி போன்ற துறைகள் தொடர்பில் பங்களிப்பு செய்வது குறித்து இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் இதற்கான திட்டத்தை முன்னெடுத்துள்ளது. முதற்கட்டமாக புதிதாக 300 தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என, மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.