வாள் உள்ளிட்ட ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான இறுதிநாள்

வாள் உள்ளிட்ட ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான இறுதிநாள் இன்று

by Staff Writer 05-05-2019 | 7:31 AM
Colombo (News 1st) வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், இன்றைய தினத்திற்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.