மூதூரில் மரமுந்திரிகை அறுவடையில் வீழ்ச்சி

மூதூர் பிரதேசத்தில் மரமுந்திரிகை அறுவடையில் வீழ்ச்சி

by Staff Writer 05-05-2019 | 11:11 AM
Colombo (News 1st) திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நல்லூர், தாயிப் நகர், உப்பூறல் ஆகிய பகுதிகளில் இந்தத் தடவை மரமுந்திரிகை செய்கை அறுவடை வீழ்ச்சிகண்டுள்ளதாக, மர முந்திரிகை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அறுவடை வீழ்ச்சிகண்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில், நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலையே அறுவடையின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.