புனித ரமழான் மாதம் நாளை மறுதினம் முதல் ஆரம்பம்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்படவில்லை - நாளை மறுதினம் முதல் புனித நோன்பு ஆரம்பம்

by Fazlullah Mubarak 05-05-2019 | 9:10 PM

ஹிஜ்ரி 1440 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையை அடுத்து ஆரம்பமானது.

இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமைக்கான தகுந்த ஆதாரங்கள் கிடைக்காமையால் புனித ஷஃபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, அதாவது நாளை மறுதினம் புனித ரமழானை ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா,பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், கதீப்மார்கள், முஅஸ்ஸீன்கள் என பலரும் இதன்போது சமூகமளித்திருந்தனர்.