சுற்றுலா அலங்கார மலர்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

சுற்றுலா அலங்கார மலர் செய்கையை மேம்படுத்த 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு

by Staff Writer 04-05-2019 | 4:46 PM
Colombo (News 1st) பெந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவில் சுற்றுலா அலங்கார மலர் செய்கை, விவசாய உற்பத்தி உள்ளிட்ட வாழ்வாதார அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காக அமைச்சினால் 70 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. 170 குடும்பங்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதும் நாளாந்த வருமானத்தை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும். தென் மாகாண கைத்தொழில் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.