சஹ்ரானின் மைத்துனர் மௌலவி ரிலா சவுதியில் கைது

சஹ்ரான் ஹசிமின் மைத்துனர் என கூறப்படும் மௌலவி ரிலா சவுதியில் கைது

by Staff Writer 04-05-2019 | 9:47 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹசிமின் மைத்துனர் என கூறப்படும் மௌலவி ரிலா ஷஹ்னவாஜ் எனும் நபர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் இன்று செய்தி வௌியிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு இடையில் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இந்திய அதிகாரிகள், சவுதி அரேபிய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.