கொழும்பிலுள்ள பாடசாலைகளில் நாளை விசேட சோதனை

கொழும்பிலுள்ள பாடசாலைகளில் நாளை விசேட சோதனை நடவடிக்கை

by Staff Writer 04-05-2019 | 4:35 PM
Colombo (News 1st) கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், நாட்டிலுள்ள பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சில பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சில பாடசாலைகள் நாளைய தினம் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் பிரகாரம், கொழும்பிலுள்ள பாடசாலைகளில் நாளை விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். இதனால் நாளை பிற்பகல் 1 மணிக்கு பின்னர், பாடசாலை வளாகங்களுக்கு அருகில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை வளாகங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்