NTJ அமைப்பினரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இருவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

by Staff Writer 03-05-2019 | 4:12 PM
Colombo (News 1st) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள, தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டு செயற்பாட்டாளர்களை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு மேல் மாகாண புலனாய்வுப் பிரிவிற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிரிவினைவாத பரப்புரைகள் அடங்கிய இறுவட்டுகள், வோக்கிடாக்கி, மடிக்கணனி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களுடன் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் கொட்டாஞ்சேனை மெசஞ்சர் வீதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.