NTJ அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு விளக்கமறியல்

by Staff Writer 02-05-2019 | 1:15 PM
Colombo (News 1st) தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாரூக் மொஹமட் பவாஸ் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (2ஆம் திகதி) முற்பகல் சந்தேகநபரை கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிரான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேலதிக நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.