பூநகரியில் யானை தாக்கி பெண் பலி

பூநகரியில் யானை தாக்கி பெண் பலி

by Staff Writer 02-05-2019 | 4:12 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - பூநகரி, கிராஞ்சி பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 7 மணியளவில் வீட்டு முற்றத்தில் குழந்தையுடன் இருந்த பெண்ணை யானை தாக்கியுள்ளது. சம்பவத்தில் 32 வயதான பெண், அவரின் ஒன்றரை வயது மற்றும் 12 வயதான மகன்மாரும் காயமடைந்தனர். எனினும், சிகிக்சை பலனின்றி பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர். தோப்பூர் பிரதேசத்தில் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. பகல் வேளையில் தோப்பூர் அல்லைக்குளத்தில் நிற்கும் யானைகள் இரவு மற்றும் அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்து அச்சுறுத்துவதாக மக்கள் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்