சஹ்ரானின் மனைவியும் குழந்தையும் உடல் நிலை தேறி வருவதாக தகவல் 

by Staff Writer 02-05-2019 | 7:53 PM
Colombo (News 1st) சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, குண்டுதாரி சஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளையின் நிலைமை தொடர்பில் அம்பாறை பொது வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் இன்று தெளிவூட்டினார். கடந்த 27 ஆம் திகதி வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட போது, குழந்தை மற்றும் அப்பெண்ணின் உடலில் சிறியளவில் எரிகாயங்கள் காணப்பட்டதாகவும் சத்திரசிகிச்சையின் பின்னர் அவர்கள் தற்போது உடல் நிலை தேறி வருவதாகவும் அம்பாறை பொது வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் உபுல் விஜேநாயக்க குறிப்பிட்டார்.