கொழும்பு நோக்கி பயணித்த ரயில் திடீர் சோதனை

கொழும்பு நோக்கி பயணித்த ரயில் பாணந்துறையில் திடீர் சோதனை

by Staff Writer 02-05-2019 | 8:55 AM
Colombo (News 1st) பெலியத்தயிலிருந்து கொழும்பு - கோட்டை வரை பயணித்த ரயில், பாணந்துறை ரயில் நிலையத்தில் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய குறித்த ரயில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த ரயிலில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, கரையோர ரயில் மார்க்கத்தினூடான ரயில்சேவை தாமதமாகியுள்ளது.