by Staff Writer 01-05-2019 | 12:28 PM
Colombo (News 1st) வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு மேலதிகமான பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நிறுத்துமாறு, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.