யாழ். தென்மராட்சியில் இருதரப்பினர் இடையேயான மோதலில் ஒருவர் பலி

by Staff Writer 01-05-2019 | 1:22 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - தென்மராட்சி, பாலாவிப் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். தென்மராட்சி - பாலாவிப் பகுதியில் நேற்று (30ஆம் திகதி) மாலை இருதரப்பினரிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, வாள் மற்றும் கூரான ஆயுதத்தால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பெண்கள் உள்ளிட்ட 8 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக வைத்து இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மேலும், இந்த மோதல் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.