சவுதி பிரஜைகளை வௌியேறுமாறு அறிவிப்பு

சவுதி அரேபிய பிரஜைகளை இலங்கையிலிருந்து வௌியேறுமாறு தூதரகம் அறிவிப்பு

by Staff Writer 01-05-2019 | 6:44 PM
Colombo (News 1st) இலங்கையில் வசிக்கும் சவுதி அரேபிய பிரஜைகளை நாட்டிலிருந்து வௌியேறுமாறு இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையின் பாதுகாப்பு நிலையைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமது பிரஜைகளுக்கு தௌிவூட்டியுள்ளதாக சவுதி தூதரக உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.