கந்தளாய் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

கந்தளாய் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 01-05-2019 | 7:50 AM
Colombo (News 1st) திருகோணமலை - கொழும்பு வீதியில், கந்தளாய் 97ஆம் கட்டை பகுதியில் இரண்டு லொறிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கருங்கல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று மற்றுமொறு சிறிய ரக லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்தின்போது சிறிய ரக லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 18 மற்றும் 25 வயதான இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.