அமெரிக்க தடை நடைமுறையில் சாத்தியப்படாது - ஈரான்

அமெரிக்காவின் தடை நடைமுறையில் சாத்தியப்படாது - ஈரானிய ஜனாதிபதி

by Staff Writer 01-05-2019 | 1:58 PM
Colombo (News 1st) தமது நாட்டின் மீதான அமெரிக்காவின் தடைகள், நடைமுறையில் சாத்தியப்படாது என, ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி (Hassan Rouhani) தெரிவித்துள்ளார். அமெரிக்காவால் தொடர்ச்சியாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியின் மீது தடைகள் விதிக்கப்பட்டாலும் தமது நடவடிக்கைகளை ஈரான் எப்பொழுதும் முன்னெடுக்கும் எனவும் ஜனாதிபதி ஹஸன் ரெளஹானி கூறியுள்ளார். அமெரிக்காவின் தடை விதிக்கும் நடவடிக்கை, அடிப்படையற்றதும் பூச்சியத்தன்மை வாய்ந்ததும் என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.