வெடிமருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தம்

வெடிமருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

by Staff Writer 30-04-2019 | 9:50 AM
Colombo (News 1st) வர்த்தக நடவடிக்கைகளுக்காக வெடிமருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல் குவாரிகளில் பெரும்பாலும் இவ்வாறான வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதாக, வெடிமருந்துகள் கட்டுப்பாட்டு நிலையத்தின் பிரதான அதிகாரி கே.பி.ஆர். பத்திரன தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மெலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டின் பாதுகாப்பு கருதி கல் குவாரிகளின் நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.