தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்ட இராணுவ சிப்பாய்

தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அமெரிக்க சிப்பாய் கைது

by Staff Writer 30-04-2019 | 8:47 AM
Colombo (News 1st) லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட அமெரிக்க முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எப்.பி.ஐ. உளவுப்பிரிவின் சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய மார்க் ஸ்டீவன் டொமின்கோ (Mark Steven Domingo) எனும் அமெரிக்க முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் 4 மாதங்கள் வரை அமெரிக்க இராணுவத்திற்காக சேவையாற்றிய மார்க் ஸ்டீவன் டொமின்கோ, அதன்பின்னர் தீவிரவாதிகளுக்கு உதவி வந்துள்ளதாக எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதேவேளை, மார்க் ஸ்டீவன் டொமின்கோ அண்மையில் இஸ்லாமிய மதத்தில் இணைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.